தமிழக ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு – வலுக்கும் முக்கிய கோரிக்கை!
தமிழக அரசின் ஆசிரியர் துறையில் உள்ள பல முக்கிய கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று முதல்வருக்கு ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
கோரிக்கை வலுயுறுத்தல்:
தமிழகம் முழுவதும் ஆசிரியர் துறைகளில் பல கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வருக்கு ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ஆசிரியர்கள் பணி மிகவும் முக்கிய பணியாக உள்ளது. தன்னலம் பாராமல் மாணவர்களின் நலனிற்காக பாடுபடும் ஆசிரியர்களுக்கு உரிய அனைத்து பலன்களும் வழங்கப்பட வேண்டும்.
தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு- மாதம் ரூ.40,000/- ஊதியம்!
அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலை, தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலும் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும். ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன்கள் போன்றவை தாமதம் ஆகிறது. 10,000 க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு 2 மாதம் ஊதியம் நிலுவையில் உள்ளது. இது போன்ற அனைத்து கோரிக்கைகளையும் முதல்வர் கவனத்தில் கொண்டு உடனடியாக அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join Our WhatsApp Group” for Latest Updates
Follow our Instagram for more Latest Updates