TNPSC Group 2, 2A தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – 12.45 மணிக்கு பிறகே வெளியில் வர அனுமதி!

0
TNPSC Group 2, 2A தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு - 12.45 மணிக்கு பிறகே வெளியில் வர அனுமதி!
TNPSC Group 2, 2A தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு - 12.45 மணிக்கு பிறகே வெளியில் வர அனுமதி!
TNPSC Group 2, 2A தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – 12.45 மணிக்கு பிறகே வெளியில் வர அனுமதி!

TNPSC சார்பில் இந்த ஆண்டு 32 வகையான தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 5,529 காலி இடங்களை நிரப்புவதற்காக இன்று குரூப் 2, 2ஏ தேர்வுகள் தொடங்கி 38 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. மேலும் தேர்வு நேரத்தில் சோதனை செய்வதற்காக 6,400 குழுக்கள், 333 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Group 2, 2A தேர்வு இன்று தொடக்கம்:

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி தகுதியானவர்களை தேர்வு செய்ய போட்டி தேர்வுகள், நேர்காணல் தேர்வுகள் ஆகியவற்றை TNPSC நடத்தி வருகிறது. அரசு பணிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5, 6, 7, 8 ஆகிய தேர்வுகள் நடைபெறுகிறது. இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 7000+ காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download

இதன் அடிப்படையில் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு மே 21 அன்று நடைபெறும் என்றும் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 23 முதல் மார்ச் 23ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்படும் என TNPSC அறிவித்தது. இந்த அறிவிப்பின் படி தேர்வுக்கு 11,78,175 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். குரூப் 2, 2A தேர்வுக்கான நுழைவு சீட்டுகளை தனது அதிகாரப்பூர்வ இணையதளமான http://tnpsc.gov.in-யில் வெளியிட்டது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தங்கள் OTR கணக்கு வாயிலாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.

மேலும் தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு இன்று தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இன்று குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வுகள் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. தேர்வர்கள் இன்று காலை 8.30 மணிக்கே தேர்வு மையத்திற்கு வருகை புரிந்தனர். ஏனென்றால் 9 மணிக்கு பின் தேர்வு மையத்திற்குள் வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என முன்னதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.

சென்னை ரயில் பயணிகள் கவனத்திற்கு – காவல்துறையின் முக்கிய அறிவுறுத்தல்கள்!

மேலும் தேர்வு முடிந்த பின்னர் தேர்வர்கள் 12.45 மணிக்கு பின்னரே தேர்வறையை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றும் TNPSC தெரிவித்துள்ளது. குரூப் 2, 2ஏ தேர்வு எழுத வந்தவர்கள் முகக்கவசம் அணிந்து உள்ளார்களாக என்பதை சரிபார்த்த பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!