அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இதை செய்யாவிட்டால் கார்டு ரத்து!
நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் அரசால் வழங்கப்பட்டுள்ள முக்கிய ஆவணமாக உள்ள ரேஷன் கார்டில் செய்ய வேண்டிய முக்கிய விஷயத்தை அரசு மக்களுக்கு நினைவுபடுத்தி வருகிறது. இதை செய்ய தவறினால் உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டு விடும்.
ரேஷன் கார்டு:
அனைத்து குடிமக்களுக்கும் முக்கிய ஆதாரமாக ரேஷன் அட்டை உள்ளது. நாட்டில் எந்த நிலை குடிமகனிற்கும் ரேஷன் அட்டை தான் முதல் நிலை ஆவணம். ரேஷன் அட்டைகளின் மூலம் தான் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும் வழங்கி வருகிறது. குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாதாந்திர உணவுப்பொருட்களையும் மலிவு விலையில் அரசு வழங்கி வருகிறது. அரசின் உதவிப்பணம் கூட ரேஷன் கார்டை அடிப்படியாக வைத்து தான் வழங்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் மத்திய அரசு நாட்டில் உள்ள புலம் பெயரும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரே நாடு ஒரே கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு பயனாளி நாட்டின் எந்த மூலையில் இருந்தும், தங்களின் ரேஷன் ஒதுக்கீடுகளை பெற முடியும். கொரோனா காலத்தில் பல லட்சகணக்கான புலம் பெயரும் தொழிலாளர்கள் அத்தியாவசிய உணவு பொருட்கள் கூட இல்லாமல் தவித்து வந்தனர். அவர்களுக்கு உதவும் வகையில் தான் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதற்கு ஒரு முக்கிய படியாக, உங்கள் ரேஷன் கார்டுடன் குடும்பத்தினரின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இதை செய்வதன் மூலம் நாம் ஒரே நாடு ஒரே கார்டு திட்டத்தில் எளிதாக பயனடையலாம். ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு முன்னதாக மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் அளித்தது. ஆனால் தற்போது அதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டு ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதை செய்ய தவறும் 1ம் தேதி முதல் உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டு விடும்.