சென்னை ரயில் பயணிகள் கவனத்திற்கு – காவல்துறையின் முக்கிய அறிவுறுத்தல்கள்!
ரயில் பயணிகள் உரிய காரணம் இல்லாமல் ரயிலின் அலார செயினை இழுக்கக் கூடாது என்று ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறை பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனை மீறினால் ரயில்வே சட்ட பிரிவின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அலார செயின்:
இந்தியாவில் ரயில் போக்குவரத்து அனைவருக்கும் ஏற்ற சிறந்த பயணமாக உள்ளது. பெரும்பாலும் மக்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்ல ரயிலையே தேர்வு செய்கின்றனர். ஏனெனில் ரயிலில் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகள் இருப்பதாலும் பயண கட்டணம் பொருளாதாரத்திற்கு ஏற்ப உள்ளதாலும் மக்கள் அதிகளவில் ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்த வசதிகளை தொடர்ந்து ரயிலில் சில அவசரமான சூழ்நிலைகளில் ரயிலை நிறுத்துவதற்காக அலார செயின் வைக்கப்பட்டுள்ளது. இதனை தகுந்த காரணங்களுக்கு பயன்படுத்துவது அவசியமாகும். ஆனால் இதை பணிகள் அற்ப காரணங்களுக்கு பயன்படுத்துகின்றனர்.
Exams Daily Mobile App Download
அதாவது ரயில் தன்னுடன் வந்தவர் இன்னும் வரவில்லை, அல்லது அவர்கள் ஏதேனும் பொருள் வாங்க கீழே இறங்கிய போது ரயில் இயக்கப்பட்டால் மேலும் தன்னுடைய ரயில் நிலையம் வந்தது தெரியாமல் தூங்கி விட்டால் பயணிகள் அலார செயினை இழுத்து ரயிலை நிறுத்தி விடுகின்றனர். இது போன்ற காரணங்களுக்கு ரயிலை நிறுத்துவது ரயில்வே சட்டப்படி குற்றமாகும். மீண்டும் என்ஜினை இயங்க வைத்து ரயிலை இயக்க நீண்ட நேரம் ஆகிவிடும். அதனால் செல்ல வேண்டிய ரயில் நிலையத்திற்கு ரயில்கள் தாமதமாக செல்ல நேரிடும் ரயில் பயணிகளும் சிரமத்திற்கு ஆளாகுவர்.
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு – பிளேயிங் 11 அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்?
இந்த நிலையில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் காவலர்கள் நடத்திய விழிப்புணர்வு முகாமில் பயணிகள் தகுந்த காரணமின்றி ரயில் வண்டியில் இருக்கும் அலார செயினை இழுத்து வண்டியை நிறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். இதனை மீறி ரயில் செயின் இழுக்கப்பட்டால் ரயில்வே சட்டப்பிரிவு 143ன் படி தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் நடைமேடைக்கு ரயில் வரும் அரைமணி நேரம் முன்னதாக பயணிகள் வர வேண்டும், பெண் பயணிகள் இரவு பயணத்தின் போது ஜன்னல்களை மூடி கொண்டு பயணிக்க வேண்டும் போன்ற அறிவுரைகளும் முகாமில் வழங்கப்பட்டுள்ளது.