TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – TET தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம்!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதன் அடிப்படையில் விண்ணப்ப பதிவு தொடங்கியது, மேலும் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சர்வர் முடங்கியதால் பல்லாயிரக் கணக்கானவர்களால் இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய முடியவில்லை. இந்நிலையில் TET தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளது.
முக்கிய அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா வருகையால், எந்த ஒரு போட்டி தேர்வுகளும் நடைபெறவில்லை. இதனால் போட்டிதேர்வுக்கு தயாராகி வந்தவர்கள் வருடக்கணக்கில் காத்திருந்தனர். தமிழக சுகாதாரதுறையின் பெரும் முயற்சியால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து உள்ளதால், அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டு உள்ளது. மேலும் அனைத்து துறையில் இருந்து போட்டித் தேர்வு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் TET தேர்வு நடப்பு வருடம் கட்டாயம் நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தமிழ்நாட்டில் பி.எட் முடித்தவர்கள் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும்.
TN Job “FB Group” Join Now
அதன்படி 2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விரும்புவோர் கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி உடன் நிறைவடைந்தது. தேர்வை பொறுத்தவரையில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1, தாள்-2 என்ற அடிப்படையில் நடைபெற உள்ளது. இதன்படி, டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்கள் முதல் தாள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் இரண்டாம் தாள் தேர்வினை எழுதலாம். மேலும் முதல் மற்றும் இரண்டாம் தாளில் 150 வினாக்கள் இடம்பெறும். இதில் பெரும்பாலும் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல், மொழிப்பாடம் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – மே 5 முதல் தேர்வுகள் துவக்கம்!
இந்த தேர்வுக்கு சுமார் 4.50 லட்சம் பேர் விண்ணப்பித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கடைசி நேரத்தில் ஒரே கட்டத்தில் பலர் விண்ணப்பிக்க முயன்றதால் சர்வர் முடங்கியதாக தகவல் வெளியானது. மேலும், பலருக்கு ஒடிபி பெறுவதில் சிக்கல் இருந்ததாகவும் இதனால் பலரால் உரியக் காலத்தில் விண்ணப்பிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பி.எட். பட்டப் படிப்புக்கான முதலாம் ஆண்டு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் அவர்களாலும் விண்ணப்பிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவினை நீட்டிக்குமாறு கோரிக்கைகள் பல்வேறு தரப்பிலிருந்து TRB க்கு வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்