தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – மே 5 முதல் தேர்வுகள் துவக்கம்!
பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பின் படி, 6 மற்றும் 7ம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வும், 8 மற்றும் 9ம் வகுப்புகளுக்கு முழு ஆண்டுத் தேர்வும் நடத்தப்பட இருக்கும் நிலையில் தேர்வுகள் குறித்த கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு கால அட்டவணை:
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் கொரோனா பேரலை தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தேர்வுகளை ஆப்லைன் முறையில் நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பின் படி, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் வழக்கம் போல நடத்தப்பட இருக்கும் நிலையில் மற்ற வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் பருவத் தேர்வுகளாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு ஜூன் 1 முதல் 16 வரை கோடை விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அதன் படி, 6 மற்றும் 7ம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத் தேர்வு மற்றும் 8, 9ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு குறித்த கால அட்டவணையை முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பில், ‘சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஆளுகைக்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும், சென்னை பள்ளிகள் மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் சிறப்பு பள்ளிகள் மற்றும் Truncated பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சென்னை மாவட்ட தேர்வுக்குழுவின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் இனி சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை? அரசு பரிசீலனை!
அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் இந்த வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. இப்போது, 6, 7 ம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத் தேர்வு மற்றும் 8, 9ம் வகுப்புகளுக்கு முழு ஆண்டுத் தேர்வுகள் மே 5 முதல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்வு கால அட்டவணை இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணையின் படி, வேறு எந்த ஒரு மாற்றமும் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.