முக்கியமான நிகழ்வுகள் ஜூன்-21
சர்வதேச யோகா தினம்
- ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார்.
- சூன் 21 ஆம் நாளை அவர் இதற்காகப் பரிந்துரைத்திருந்தார். இரண்டு கதிர்த்திருப்பங்களில் ஒன்று நிகழும் இந்நாள், வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாளாகவும் உள்ளது. பல உலக நாடுகளில் இந்நாள் ஒரு குறிப்பிடத்தக்கதாகவும் உள்ளது என அவர் தெரிவித்தார்.
- 2014 டிசம்பர் 11 அன்று 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சூன் 21 ஆம் நாளை ‘பன்னாட்டு யோகா நாளாக’ அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
- முதல் முறையாக 2015 , சூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக இந்தியத்தலைநகர் தில்லியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார்.
உலக இசை தினம்
- உலக இசை தினம், 21 ஜூன் அன்று நடைபெறுகிறது.
- அந்த நாளில் ஒரு நகரம் அல்லது நாட்டிலுள்ள குடிமக்கள் சுற்றுப்புறங்களில் அல்லது பொது இடங்களில் மற்றும் பூங்காக்களில் இசைக்குமாறு அனுமதிக்கப்படுகிறார்கள்.
- இலவச கச்சேரிகளும் ஒழுங்கமைக்கப்படுகின்றன, அங்கு இசைக்கலைஞர்கள் வேடிக்கைக்காக இலவசமாக கச்சேரி நடத்துகின்றனர்.
- இசை விழா கொண்டாட்டமானது, பிரஞ்சு கலாச்சார அமைச்சர், ஜாக் லாங் மற்றும் மாரிஸ் ஃப்ளூரட் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
- இது 1982 ஆம் ஆண்டில் பாரிசில் முதன்முதலாக கொண்டாடப்பட்டது.
- இசை நாள் பின்னர் உலகம் முழுவதும் 120 நாடுகளில் கொண்டாடப்பட்டது .
கோடைகால கதிர்த்திருப்பம்
- கோடைகால கதிர்த்திருப்பம் ஜூன் 21 அன்று உள்ளது, இது பூமத்திய ரேகைக்கு வடக்கே வாழும் எவருக்கும் 2019 இன் மிக நீண்ட நாளாக இருக்கும். சூரியன் நேரடியாக கடக ரேகைக்கு அல்லது 23.5 டிகிரி வடக்கு அட்சரேகைக்கு மேல் இருக்கும்போது கோடைகால கதிர்த்திருப்பம் ஏற்படுகிறது.
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |