முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 26
தாராபாரதி பிறந்த நாள்
- தாராபாரதி 26 பிப்ரவமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 26ரி 1947 அன்று பிறந்தவர்.
- தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் மற்றும் கவிஞர் ஆவார்.
- திருவண்ணாமலை மாவட்டம் ‘குவளை’ என்னும் சிற்றூரில் பிறந்தார்.
- இவரது இயற்பெயர் ராதாகிருஷ்ணன்.
- பெற்றோர் துரைசாமி; புஷ்பம் அம்மாள்.
- 34 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியாவர்.
- ஆசிரியர் சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.
- கவிஞாயிறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
- தமிழ் நாடு அரசு 2010 – 2011 இல் இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.
- இறப்பு : 13 மே 2000 அன்று இறந்தார்.
Static GK in Tamil – TNPSC/RRB/SSC/Bank
விக்டர் ஹியூகோ பிறந்த நாள்
- விக்டர்-மாரீ ஹியூகோ பெப்ரவரி 26, 1802 அன்று பிறந்தவர்.
- ஒரு பிரெஞ்சு எழுத்தாளரும், நாடகாசிரியரும், புதின எழுத்தாளரும், கட்டுரையாளரும், காட்சிக் கலைஞரும், அரசியலாளரும், மனித உரிமைகள் ஆர்வலரும் ஆவார்.
- இவரே பிரான்சின் புனைவிய இயக்கத்தின் மிகச் செல்வாக்குள்ள பேச்சாளர் ஆவார்.
- பிரான்சில் இவரது புகழ் முதன்மையாக இவர் எழுதிய கவிதை, நாடகம் என்பவற்றிலேயே தங்கியிருந்தது.
- இவரெழுதிய பல கவிதை நூல்களில், லெஸ் காண்டம்பிளேஷன்ஸ் (Les Contemplations), லா லெஜெண்டே லெஸ் சீக்கிளெஸ் (La Légende des siècles) என்பன திறனாய்வு நோக்கில் உயர்வாக மதிக்கப்படுகின்றன.
- இவர் குடியரசுவாதத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.
- இவரது நாடகங்கள் நூற்றுக்கணக்கான முறை மேடை நாடகமாக அரங்கேறின. திரைப்படங்களாகவும் தயாரிக்கப் பட்டன.
- இவரது படைப்புகள் சுயநலமற்ற, தொலைநோக்குப் பார்வையையும், மனித நேயத்தையும் எடுத்துக்கூறின.
- இறப்பு : மே 22, 1885 அன்று இறந்தார்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்