1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மே 16 பள்ளிகள் திறப்பு & தேர்வு முடிவுகள்!
மாநிலத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து வருகிற மே 16ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதுமட்டுமின்றி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்தும் பேட்டி அளித்துள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு:
கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. இதனால் ஆண்டு இறுதித்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதால் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் நடைபெறுகிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற மே 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் அறிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அடுத்த வாரத்தில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். மாணவர்கள் தங்கள் முடிவுகளை karresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்படுவதைப் பரிந்துரைக்கும் அனைத்து அறிக்கைகளையும் அமைச்சர் மறுத்துள்ளார். கர்நாடகாவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்டுவது குறித்து பேசிய பி.சி.நாகேஷ், பள்ளிகளை மீண்டும் திறப்பதை தள்ளிப்போடவோ அல்லது தாமதப்படுத்தவோ பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக கூறினார். வட கர்நாடகாவில் நிலவும் அனல் காற்றின் காரணமாக இவ்வாறு கோரப்பட்டது.
தமிழ்நாடு தபால் துறையில் 4310 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இருப்பினும் அனைத்து தரப்பு வாதங்களுக்கும் செவிசாய்த்த பிறகு, கர்நாடகா பள்ளிகள் திட்டமிட்டபடி மே 16, 2022 முதல் மீண்டும் திறக்கப்படும் என கூறியுள்ளார். அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் செயல்படும் எனவும் கூறப்படுகிறது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் துல்லியமான தேதி, நேரம் குறித்த அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.