தமிழ்நாடு தபால் துறையில் 4310 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழ்நாடு தபால் துறையில் 4310 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழ்நாடு தபால் துறையில் 4310 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழ்நாடு தபால் துறையில் 4310 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு தபால் துறையில் உள்ள 4310 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது தபால் துறை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தபால் துறை:

தமிழ்நாடு காவல்துறை வட்டாரத்தில் உள்ள கிராமின் டாக் சேவக்கில் உள்ள காலிப்பணியிடம் குறித்தான வேலைவாய்ப்பை தபால்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த துறையில் மொத்தமாக 4310 காலிப்பணியிடங்கள் உள்ளன. Branch Post Master பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் மற்றும் அடிப்படை கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தபால் நிலையப் பொறுப்பாளராக அனைத்து பணிகளையும் இந்த தேர்வாளர் சமாளித்துக் கொள்ள வேண்டும் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சல் துறை சேவைகளை வழங்குவது, பரிவர்த்தனைகளை செய்வது, ரெக்கார்டுகளை கையாள்வது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்

தமிழகத்தில் நாளை முதல் இம்மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

மாதந்தோறும் இந்த பணியிடங்களுக்கு ரூ.12,000 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Assistant Branch Post Master பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அடிப்படை கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தபால் நிலைய பொருட்களை மக்களுக்கு வினியோகம் செய்வது, வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு சென்று தபால்களை புக்கிங் செய்வது, பரிவர்த்தனைகளை சரியாக மேற்கொள்வது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் Dak Sevak பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அடிப்படை கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தபால்துறை பணிகளில் போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி போஸ்ட் மாஸ்டர் ஆகியோருக்கு உதவியாக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

12 ஆம் வகுப்பு வரை கணினி அறிவியலை ஒரு பாடமாக படித்து இருப்பவர்கள் மட்டுமே இந்த தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் தனியாக கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டியது இல்லை. இந்த பணியிடங்களுக்கு மாதம் 10 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 5ம் தேதியின் படி 18 வயது முதல் 40 வயதிற்குள் இருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால்நிலையம் மூலமாக 100 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!