தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் – முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் – முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் நிவாரணத் தொகை பெறுவது குறித்து முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் சுட்டிக்காட்டியுள்ளது.

நிவாரணத்தொகை:

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த கொரோனா வைரஸ் தொற்று மேலும் உருமாற்றம் அடைந்து டெல்டா பிளஸ் வைரஸ் வேகமெடுக்க தொடங்கியது. மத்திய சுகாதாரத்துறை வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசுக்கு அறிவுரைகளை வழங்கியது. இதன் அடிப்படையில் ஊரடங்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆனாலும் தொற்று பரவல் குறையவில்லை. முதல் அலையை விட இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடியது.

PM கிசான் நிதியுதவி பெறும் விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு – eKYC அப்டேட் செய்ய மே 22 கடைசி நாள்!

முதல் அலையில் வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். ஆனால் இரண்டாம் அலையில் குழந்தைகளும், நடுத்தர வயதினரும் கூட தொற்றுக்கு ஆளாகி பாதிக்கப்பட்டனர். இதனால் ஒவ்வொரு குடும்பமும் சம்பளம் ஈட்டும் நபரையும், குடும்பத் தலைவரையும் இழந்து பொருளாதார ரீதியாக சிரமப்பட்டனர். இந்த நிலையில் அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண தொகைகளை வழங்கப்படும் என்று அறிவித்தது.

மாநில அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை – ஜாக்பாட் அறிவிப்பு!

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் நிவாரணத் தொகை பெற விண்ணப்பிப்பது தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. 20.03.2022 முதல் கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும். கால கெடுவுக்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!