மாநில அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை – ஜாக்பாட் அறிவிப்பு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை - ஜாக்பாட் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை - ஜாக்பாட் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை – ஜாக்பாட் அறிவிப்பு!

மணிப்பூர் மாநில அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக முதல்வர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அந்த அறிவிப்பில் (ஏப்ரல் 1) இன்று முதல் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் மட்டும் அரசு அலுவலகங்கள் செயல்படும். பிற 2 நாட்கள் விடுமுறை அளித்து அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வாரம் 2 நாள் விடுமுறை:

60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மேலும் கடந்த மார்ச் 10 தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து 60 தொகுதிகளில் பாஜக 32 இடங்களில் அமோக வெற்றி அடைந்து மீண்டும் ஆட்சியை பிடித்து உள்ளது. எனவே பீரன்சிங் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த மார்ச் 22 அன்று முதல்வர் பீரன்சிங் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநிலத்தில் அரசு அலுவலகங்களின் நேரத்தை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் இது குறித்து ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி, அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் செயல்படவும், 2 நாள் விடுமுறை அளிக்கவும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்த முடிவு குறித்து மணிப்பூர் அரசின் துணைச் செயலர் சுனந்தா தோக்சோம் வெளியிட்ட அறிவிப்பில், மாநிலத்தில் அனைத்து அரசு துறை நிறுவனங்கள், அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இயங்கும். அதன்படி கோடைக்காலமான மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், குளிர்காலமான நவம்பர் முதல் பிப்ரவரி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் அலுவலகம் செயல்படும். மேலும் மதிய உணவு இடைவேளை 1 முதல் 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும். இந்த வகையில் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகிறது.

டிகிரி முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அரசு அலுவலகங்கள் 5 நாள் மட்டுமே செயல்படும் என்பதால் 2 நாள் விடுப்பு கிடைக்கும். இந்த விடுமுறை அரசு ஊழியர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். மேலும் வீட்டு வேலைகளை மேற்கொள்வதுடன், குழந்தைகளுடன் நேரம் செலவிடலாம் என்று அதிகாரிகள் கருத்து கூறியுள்ளனர். இதனால் வாரத்தின் 5 நாட்கள் வழக்கத்தை விட சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள், அவர்கள் பணியும் விரைவாக முடியும் என்று தெரிவித்து உள்ளனர். இதையடுத்து அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளை காலை 8 மணிக்கு துவக்கலாம். இது தவிர நேரத்தை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மாற்றம் செய்து வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது. வாரம் 2 முறை விடுப்பு அறிவிப்பு மணிப்பூர் அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!