TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணயம் நடத்தும் அனைத்து தகுதி தேர்வுகளும் எப்போதும் ஓஎம்ஆர் சீட் மூலமாகவே நடைபெறும். ஆனால் இந்தாண்டு முதன் முறையாக கணினி மூலமாக தேர்வு நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கணினி வழி தேர்வு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு துறைகளுக்கான பணியிடங்களை நிரப்பி வருகின்றன. தகுதியான நபர்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 முதலான தகுதி தேர்வுகளை நடத்தி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்றின் காரணமாக எந்த தகுதித் தேர்வும் நடத்தப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் தான் குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது.
அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகள் 1 மணி நேரம் கூடுதலாக செயல்படும் – அரசு அறிவிப்பு!
அதன்படி மே 21 ஆம் தேதி குரூப் 2 தேர்வும், குரூப்-4 தேர்வு ஜூன் 24 ஆம் தேதியும் நடைபெறவுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு 16 காலியிடங்கள் இருப்பதால் அதற்கான தேர்வு குறித்தான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த தகுதித்தேர்வு ஜூன் 19 ஆம் தேதி இரண்டு பகுதிகளாக நடைபெறவுள்ளது. முதல் பகுதி தேர்வு காலை 9.30 முதல் 12.30 மணிவரையும், இரண்டாம் பகுதி தேர்வு பிற்பகல் 2 மணி முதல் 5 மணிவரையும் தமிழ் தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவுத் தேர்வு நடைபெறும்.
TCS நிறுவனத்தில் புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!
இந்த தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சியின் இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து ஆதார சான்றிதழ்களையும், ஆவணங்களையும் PDF வடிவில் 200 KBக்கும் மிகாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும். எப்போதும் தகுதி தேர்வு ஓஎம்ஆர் சீட் மூலமாகவே நடக்கும். ஆனால் இந்தாண்டு முதன் முறையாக கணினி வழியாக நடைபெற போவதாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது.