அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகள் 1 மணி நேரம் கூடுதலாக செயல்படும் – அரசு அறிவிப்பு!
இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருகிறது. அதனால் இலங்கையின் அதிபர் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். இதனால் இலங்கையில் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டு தொடங்குவது குறித்து அந்நாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
பள்ளி திறப்பு
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இப்போது அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. ஆனால் இலங்கையில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் இன்றும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 13 பள்ளிகள் திறப்பு!
கொரோனா காரணமாக முதல் சுற்றுலா, தேயிலை உற்பத்தி மற்றும் ஆடை தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் விலையும் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. அத்துடன் பல மணி நேரம் இங்கு மின்வெட்டு ஏற்படுகிறது. அதனால் இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை கடந்த 1ம் தேதி அன்று அமல்படுத்தினார். தற்போது 5 நாட்களுக்கு பிறகு அவசர நிலை பிரகடனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
மேலும் பள்ளிகளிலும் இந்த ஆண்டு மாணவர்களுக்கு முழுமையாக பாடங்களை நடத்தி முடிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்நாட்டு கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், இந்த ஆண்டு பள்ளிகளில் முழுமையான பாடங்களை நடத்த முடியவில்லை. அதனால் அடுத்த கல்வியாண்டில் கூடுதலாக 1 மணி நேரம் அதிகரிக்கப்படும். அந்த 1 மணி நேரத்தில் அந்த பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி முதல் அடுத்த கல்வியாண்டு தொடங்கப்பட உள்ளது.