1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 13 பள்ளிகள் திறப்பு!
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி வரை வகுப்புகள் நடைபெறவுள்ளது. வகுப்பு முடிந்து அடுத்த கல்வியாண்டு ஜூன் 13 பள்ளிகள் திறக்கவுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று அதிகமாக இருந்ததால் பள்ளி, கல்லூரிகள் எதுவும் திறக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்துள்ளதால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதே போல இரண்டு ஆண்டுகளுமே 10, 11 மற்றும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை.
தமிழகத்தில் 10, 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை விளக்கம்!
இந்த ஆண்டு கண்டிப்பாக 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி பொதுத் தேர்விற்கான தேர்வு அட்டவணையும் சமீபத்தில் வெளியானது. எப்போதும்10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ஏப்ரல் மாதத்திலேயே முடிந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக சரியாக பாடம் நடத்தாத காரணத்தினால் தற்போது தான் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் கிடையாது. இருப்பினும் மே 13 ஆம் தேதி வரை வகுப்புகள் நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்த கல்வியாண்டு ஜூன் 13 ஆம் தேதி பள்ளி துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. எப்போதும் கோடை விடுமுறை குறைந்தது 45 நாட்கள் இருக்கும். ஆனால் இந்தாண்டு 30 நாட்கள் மட்டுமே இருப்பதால் மாணவர்கள் சோகத்தில் உள்ளனர்.