TCS நிறுவனத்தில் புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!
பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் தனது அட்லஸ் பணியமர்த்தல் திட்டத்திற்கு புதியவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இதற்கான தகுதி மற்றும் பிற விவரங்களை இப்பதிவில் காணலாம்.
வேலை வாய்ப்பு
முன்னணி ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தற்போது கணிதம், புள்ளியியல் அல்லது பொருளாதாரம் ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றவர்களை வேலைக்கு அமர்த்துவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது விண்ணப்பங்களை செலுத்தலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘டிசிஎஸ் அட்லஸ் பணியமர்த்தல், புதுமைக்கான ஆர்வத்துடன் ஈர்க்கக்கூடிய திறமையாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தரவுகளை மையமாகக் கொண்ட அணுகுமுறையின் மூலம் வணிக செயல்பாட்டை மறுபரிசீலனை செய்ய முடியும் என்று நம்புபவர்கள் தங்களது விண்ணப்பங்களை செலுத்தலாம்’ என்று தெரிவித்துள்ளது. இப்போது டிசிஎஸ் அட்லஸ் பணியமர்த்தல் திட்டத்திற்கான விண்ணப்ப செயல்முறை குறித்த எளிய வழிகாட்டுதல்களை இப்போது பார்க்கலாம்.
அனைத்து பள்ளிகளுக்கும் மே 2 முதல் ஜூன் 13 வரை கோடை விடுமுறை? அரசுக்கு பரிந்துரை!
விண்ணப்ப முறை:
- டிசிஎஸ் நெக்ஸ்ட்ஸ்டெப் போர்ட்டலில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவு செய்து பூர்த்தி செய்யவும்.
- உங்கள் விண்ணப்பத்தின் நிலை ‘விண்ணப்பம் பெறப்பட்டது’ என இருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் போது CT/DT ஐடியை கைவசம் வைத்திருக்க வேண்டும்.
- ஏனென்றால் படி 2ல் வழங்கப்பட்ட இணைப்பில் அதை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- உங்களிடம் ஏற்கனவே CT/DT ஐடி இருந்தால், தயவுசெய்து TCS நெக்ஸ்ட்ஸ்டெப்
- போர்ட்டலில் உள்நுழைந்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
அல்லது நீங்கள் ஒரு புதிய பயனராக இருந்தால், TCS நெக்ஸ்ட்ஸ்டெப் போர்ட்டலில் உள்நுழையவும். - அங்கு ‘இப்போது பதிவுசெய்க’ என்பதை கிளிக் செய்து, ‘IT’ என வகையை தேர்வு செய்யவும்.
- இப்போது உங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்து உங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க தொடரவும்.
பதவி:
- ரிஸ்க் மாடலர்கள்: அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல், அபாயத்தைக் குறைத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் வணிகச் செயல்பாட்டை மேம்படுத்துதல் ஆகியவற்றில் நீங்கள் ஒரு ஒருங்கிணைந்த பங்கை வகிப்பீர்கள்.
- நுண்ணறிவு மாதிரி சரிபார்ப்பாளர்கள்: கிடைக்கக்கூடிய பெரும்பாலான கருவிகள் மற்றும் நுட்பங்களின் பின்னணியில் உள்ள கருத்தை புரிந்துகொண்டு சிக்கல்களின் தன்மையைப் பொறுத்து அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
- திறமையான புள்ளியியல் வல்லுநர்கள்: தகவலறிந்த திட்டமிடலை இயக்க தரவை பகுப்பாய்வு செய்து விளக்க வேண்டும்.
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் பணத்தை திரும்பப் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!
கல்வித் தகுதி:
- பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ (பொருந்தினால்), பட்டப்படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புத் தேர்வுகளில் ஒவ்வொரு பாடத்திலும் 60% அல்லது 6 CGPA மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
- அந்த வகையில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் எந்த பின்னடைவுகளையும் கொண்டிருக்கக் கூடாது.
- படிப்பை முடித்ததற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
- தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு ஒரு பேக்லாக் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
- இருப்பினும் நிலுவையில் உள்ள அனைத்து பேக்லாக்களும் நிர்ணயிக்கப்பட்ட பாட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.
- கல்வியில் ஏதேனும் இடைவெளி இருந்தால் அதை அறிவிப்பது கட்டாயமாகும்.
- ஒட்டுமொத்த கல்வி இடைவெளி 24 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பாடநெறி வகைகள்:
முழுநேர படிப்புகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
NIOSல் இடைநிலை மற்றும் மூத்த இடைநிலைப் படிப்பை முடித்த விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
பணி அனுபவம்:
2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் TCS அட்லஸ் பணியமர்த்தல் செயல்முறைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
வயது:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 28 ஆண்டுகள் என இருக்க வேண்டும். .
படிப்புகள்:
கணிதம்/புள்ளியியல்/பொருளியல் போன்ற சிறப்புப் படிப்புகளுடன் கூடிய முழுநேர முதுகலைப் படிப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.