PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் பணத்தை திரும்பப் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!
தற்போது PF கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது சேமிப்பில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை எடுத்துக்கொள்ள EPFO அனுமதிக்கிறது. இதற்கான ஆன்லைன் செயல்முறைகளை இபபதிவில் விரிவாக பார்க்கலாம்.
PF கணக்கு
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஒவ்வொரு மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கும் உத்திரவாதமான எதிர்காலத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு ஊழியர் தான் உழைக்கும் காலங்களில் சேர்த்து வைக்கும் பணத்தை, அவர்களின் எதிர்கால தேவைக்காக பயன்படுத்த EPFO அனுமதிக்கிறது. ஆனால் PF கணக்கு வைத்திருப்பவர் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் மட்டுமே தனது பணத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ திரும்பப் பெற முடியும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
சென்னை: மீண்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
இப்போது EPF லிருந்து பணத்தை எடுக்கவோ, PF கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யவோ ஆதார் அட்டையுடன் UAN எண்ணை இணைத்திருக்க வேண்டும். மேலும், KYCக்கு பான் கார்டைப் பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் பணியாளர் வருங்கால வைப்பு நிதியின் உறுப்பினர் ஆன்லைனில் பணம் எடுக்க e-SEWA போர்ட்டலை பயன்படுத்தலாம். இல்லையெனில் பணியாளர் எதிர்கால நிதியம் (EPFO) இணையப்பக்கம் அல்லது உமாங் செயலியை பயன்படுத்தி இந்த செயல்முறைகளை ஆன்லைனில் மேற்கொள்ள முடியும்.
- முதலில் unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற UAN போர்ட்டலை திறக்கவும்.
- உங்கள் UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சாவைப் பயன்படுத்தி இ-சேவை போர்ட்டலில் உள்நுழையவும்.
- “ஆன்லைன் சேவைகள்” என்பதைக் கிளிக் செய்து, “கிளைம்” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
- அதன் பிறகு உங்கள் வங்கிக் கணக்குத் தகவலை உள்ளிடவும்.
- “ஆன்லைன் உரிமைகோரலுக்குச் செல்லவும்” என்பதைக் கிளிக் செய்யவும்
- அடுத்து, க்ளைம் படிவத்தில், கீழ்தோன்றும் பெட்டியிலிருந்து பணத்தை எடுப்பதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களைப் பதிவேற்றவும்.
- மீண்டும், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும்.
- OTPக்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்
- அந்த OTP எண்ணை உள்ளிடவும்.
- இப்போது கோரிக்கை விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும்.