சென்னை: மீண்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
நாளுக்கு நாள் ஆபரணத் தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்துகொண்டே செல்கிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,600 க்கு விற்பனையான நிலையில் ஒரே நாளில் ரூ.136 அதிகரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டும், குறைந்து கொண்டுமாய் இருக்கிறது. தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் நகைப் பிரியர்களுக்கு தங்கத்தின் மீதுள்ள ஆசை மட்டும் குறைவதே இல்லை. பெரும்பாலும் இல்லத்தரசிகளும், நகைப்பிரியர்களும் தங்கத்தில் முதலீடு செய்வதை தான் புத்திசாலித்தனமான திட்டமாக எண்ணுகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் மட்டுமே தங்கத்தின் விலை பல ஆயிரங்கள் அதிகரித்தது.
WhatsApp பயனர்களுக்கு முக்கிய தகவல் – ஈசியா மெசேஜ் அனுப்ப புதிய அம்சம்!
தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் போரால் அந்நாட்டில் இருந்து ஏற்றுமதி, இறக்குமதி அனைத்தும் பாதிப்படைந்துள்ளதால் பங்கு சந்தை நிலவரம் மிகவும் சரிவடைந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்து சில நாட்களுக்கு முன்பு 40,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,600 க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,825 க்கு விற்பனையானது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.38,736-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.17 அதிகரித்து ரூ.4,84 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை நேற்று ரூ.71.30 க்கு விற்பனையான நிலையில் இன்று 60 காசு குறைந்து ரூ.70.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் 136 ரூபாய் உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள் சோகமடைந்துள்ளனர்.