தமிழகத்தில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு – சம்பளம் தொடர்பான புகார்!
தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் இல்லம் தேடி கல்வி என்கிற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இல்லம் தேடி கல்வி:
தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக இரண்டு ஆண்டுகளுமே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகத் தான் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த இரண்டு ஆண்டுகளுமே ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்ட காரணமாக மாணவர்களின் கல்வித்திறன் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இழந்த கற்றல் திறனை மீட்டெடுக்க கடந்த அக்டோபர் 2021 ஆம் ஆண்டில் இருந்து இல்லம் தேடி கல்வி என்கிற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
Exams Daily Mobile App Download
இந்த திட்டத்தின் மூலமாக1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அவரவர் வீட்டுக்கே தேடி சென்று தன்னார்வலர்கள் பாடங்கள் கற்பித்து வந்தனர். ஆரம்பத்தில் ஒரு சிறிய திட்டமாக தொடங்கப்பட்ட கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த இல்லம் தேடி கல்வி என்கிற திட்டம் தற்போது மாநிலம் முழுக்க சுமார் 11,000 தன்னார்வலர்களோடு இயங்கி கொண்டிருக்கிறது. இந்த தன்னார்வலர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
CMPFO நிலக்கரி சுரங்கத்தில் பணிவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரிந்து வரும் தன்னார்வலர்களுக்கு அரசு சில மாதங்களாக ஊக்கத்தொகை வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் ஊக்கத்தொகை குறித்து பேச முடியாமல் தன்னார்வலர்கள் தவித்து கொண்டிருக்கின்றனர். ஒரு சில தன்னார்வலர்களுக்கு 4 மாத ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. இதனால், அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் கலந்துகொண்டு தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.