முழு ஊரடங்கில் இருந்து கூடுதல் தளர்வுகள் அமல்? மாவட்ட நிர்வாகத்திற்கு ஜனாதிபதி வலியுறுத்தல்!

0
முழு ஊரடங்கில் இருந்து கூடுதல் தளர்வுகள் அமல்? மாவட்ட நிர்வாகத்திற்கு ஜனாதிபதி வலியுறுத்தல்!
முழு ஊரடங்கில் இருந்து கூடுதல் தளர்வுகள் அமல்? மாவட்ட நிர்வாகத்திற்கு ஜனாதிபதி வலியுறுத்தல்!
முழு ஊரடங்கில் இருந்து கூடுதல் தளர்வுகள் அமல்? மாவட்ட நிர்வாகத்திற்கு ஜனாதிபதி வலியுறுத்தல்!

மிக மோசமான ஓமிக்ரான் வைரஸின் பாதிப்புகளால் ஷாங்காயின் 25 மில்லியன் குடியிருப்பாளர்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்குள் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டாம் என சீன ஜனாதிபதி வலியுறுத்தி இருக்கிறார்.

ஊரடங்கு தளர்வு

சீனாவின் நிதி மையமான ஷாங்காயில் நேற்று (ஏப்ரல்.13) ஒரே நாளில் 27,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் இது ஒரு நாளில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாக கருதப்பட்டுள்ளது. இதனால் ஷாங்காயில், சீனாவின் கடுமையான “டைனமிக் கோவிட் கிளியரன்ஸ்” கொள்கை மற்றும் தொற்றுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் என்று ஜனாதிபதி ஜி ஜின்பிங் அறிவுறுத்தி இருக்கிறார். மேலும் இன்று காலை வெளியிடப்பட்ட தேசிய சுகாதார ஆணையத்தின் (NHC) தினசரி புல்லட்டின் படி, மெயின்லேண்ட் கொரோனா எண்களும் மிக அதிகமாக இருந்துள்ளன.

இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இப்போது ஷாங்காயின் சுமார் 25 மில்லியன் மக்கள் மிக மோசமான ஓமிக்ரான்-டிரைவ் கொரோனா பாதிப்புகளை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இந்த நகரத்தில் கடந்த 3 வாரத்திற்கு மேலாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. அதாவது கடந்த இரண்டு வாரங்களாக புதிய வழக்குகள் பதிவாகாத சில பகுதிகளில் மட்டும் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது. இருப்பினும் பெரும்பான்மையான மக்கள் இன்னும் பூட்டப்பட்ட நிலையில் உள்ளனர்.

தமிழகத்தின் இப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல் – அரசு அதிரடி நடவடிக்கை!

இதற்கிடையில், தற்போதைய கொரோனா கட்டுப்பாட்டு கொள்கைகளை கடைபிடிக்குமாறு ஜி அழைப்பு விடுத்ததை அடுத்து ஷாங்காயில் பூட்டுதலை மேலும் தளர்த்துவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக தெரிகிறது. இதற்கு முன்னதாக மார்ச் மாதத்தில் தொற்றுநோய் உருவாகியதில் இருந்து தற்போது ஷாங்காய் நகரத்தில் ஒன்பது கொரோனா நோயாளிகள் கடுமையான நிலையில் உள்ளதாக ஷாங்காயின் நகராட்சி சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது, கடுமையான வழக்குகளில் எட்டு பேர் 70 மற்றும் 93 வயதிற்குட்பட்ட வயதானவர்கள் என்றும் அவர்கள் அனைவருக்கும் தீவிர அடிப்படை நோய்கள் போன்ற அதிக ஆபத்து காரணிகள் இருப்பதாகவும் ஆணையம் கூறி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!