தமிழகத்தின் இப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல் – அரசு அதிரடி நடவடிக்கை!
பட்டவர்த்தி என்னும் கிராமத்தில் அம்பேத்கார் பிறந்தநாளை கொண்டாட சில இடையூறுகள் ஏற்பட்ட காரணத்தினால் அந்த கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
144 தடை உத்தரவு:
இந்தியா முழுவதும் வாழும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக குரல் எழுப்பியவர் தான் டாக்டர் அம்பேத்கர். மேலும், ஒதுக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார். ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் பிறந்தநாளை அரசு விழாவாக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அனைத்து ஊர்களிலுமே அம்பேத்கர் பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் அனைத்து பள்ளிகளிலும் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
தமிழக மின் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!
பெரும்பாலும் அம்பேத்கார் பிறந்தநாள் அன்று ஏதேனும் கலவரம் கட்டாயமாக வரும். பட்டவர்த்தி என்னும் கிராமத்தில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சியினர் அம்பேத்கார் நினைவு நாள் அன்று அம்பேத்காருக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்தனர். ஆனால், அம்பேத்கார் நினைவு நாள் அன்று உருவப்படத்திற்கு கூட மரியாதை செய்ய விடாமல் மற்ற சமூகத்தினர் பிரச்சனை செய்தனர். இதனால் அம்பேத்கர் பிறந்தநாளுக்கும் ஏதேனும் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது என்பதால் விடுதலை சிறுத்தை கட்சியினர் முன்கூட்டியே அம்பேத்கார் பிறந்தநாளை கொண்டாட அனுமதி வாங்கிவிட்டனர்.
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – ஆதாரை இணைப்பது எப்படி?
இன்று பல ஊர்களிலும் அம்பேத்காருக்கு 131 ஆவது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். பட்டவர்த்தி கிராமத்திற்கு அருகில் ஊர்திருவிழா நடைபெற்று கொண்டிருக்கிறது. எப்படியும் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்டவர்த்தி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏதேனும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் என்பதற்காக நேற்றில் இருந்து 5 நாட்களுக்கு மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் இந்த ஆணையை அமல்படுத்தியுள்ளார்.