தமிழக மின் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!
தமிழ்நாட்டில் மாயமான நிலக்கரி தொடர்பான விசாரணை அறிக்கை தயாராகும் நிலையில் உள்ளது, இரண்டொரு நாட்களில் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது என தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
நிலக்கரி
நிலக்கரி விவகாரத்தில் சென்னையிலும் தூத்துக்குடியிலும் இருப்பு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. இன்னும் மேட்டூரை ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. சென்னை பிரச்சனையைப் பொறுத்தமட்டில், இது குறித்து முழுவதுமான விசாரணைக்குப் பிறகு, அதன் அறிக்கை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அதன் பிறகு என்ன நடவடிக்கை என்பதை முதல்வரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். எந்த இடத்தில் தவறு நடந்திருக்கிறது என ஆராய்ந்து, வரும் காலங்களில் அந்தத் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ள தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு – கணக்கை PAN எண்ணுடன் இணைப்பது எப்படி? முழு விவரம் இதோ!
கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. கோடை வெயிலை எதிர்கொள்ள அனைத்து விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி, “இலவச மின் இணைப்புக்காக காத்திருந்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு லட்சமாவது விவசாயிக்கு ஆணையினை முதலமைச்சர் வரும் 16ஆம் தேதி ஆணை வழங்க உள்ளார். ஒரு லட்சம் விவசாயிகள் காணொலி காட்சி மூலம் அந்தந்தப் பகுதிகளில் இருந்து பங்கேற்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
TCS நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – 50,000 பேர் மீண்டும் அலுவலகம் வரவழைப்பு! மாஸ்டர் பிளான்!
மேலும்,அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது சமூக வலைதளங்களில் மின் பாதிப்பு குறித்த மின்சார வாரியத்தை டேக் செய்தால், உங்களுடைய இணைப்பு எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் மட்டுமே மின்தடை ஏற்படும் மற்ற சமயங்களில் மின்தடை ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அறிவித்திருக்கிறார். மின்வாரியத்தில் பல்வேறு செலவினங்களை குறைப்பது காரணமாக 2,200 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது” என கூறினார்.