வெளியானது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. ICSE வாரியம் அறிவித்த முக்கிய தகவல்..!!
இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ் (ICSE) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தனியார் பள்ளிக் கல்வி வாரியமாகும். இது இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலால் (CISCE) நிர்வகிக்கப்பட்டு ஆங்கில மொழி மூலம் சமச்சீர் பொது கல்வியை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்த வாரியமானது ஆண்டுதோறும் மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில் “இந்தியா முழுவதும் 2025 ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 18 முதல் மார்ச் 27 வரை நடத்தப்பட்டன. இந்நிலையில் ICSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (30-04-2025) காலை 11 மணி அளவில் வெளியானது. இத்தேர்வுக்கான முடிவுகளை cisce.org மற்றும் results.cisce.org ஆகிய இணையதளங்கள் மூலம் அறியலாம்” என இந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ் வாரியம் தெரிவித்துள்ளது.


























