தமிழகத்தில் 26ம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் & அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை – காரணம் இதோ!

0
தமிழகத்தில் 26ம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் & அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை - காரணம் இதோ!
தமிழகத்தில் 26ம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் & அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை - காரணம் இதோ!
தமிழகத்தில் 26ம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் & அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை – காரணம் இதோ!

மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். இந்த ஆலயத்தின் சிறப்பினைக் கண்டுகளித்திட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில், ஆடி மாதம் திருவாதிரை தினத்தை முன்னிட்டு 26-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை:

அரியலூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் ஆலயத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை தினமானது அப்பகுதிவாழ் மக்களால் வெகு விமரிசையாகவும் சிறப்புடனும் மாவட்ட அளவில் கொண்டாடப்படுகிறது, இவ்விழாவினை அரசு விழாவாகக் கொண்டாட அப்பகுதி மக்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் சார்பில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இக்கோரிக்கையினைக் கனிவுடன் பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினைச் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அரசு விழாவாகக் கொண்டாட முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆடி திருவாதிரை கொண்டாடப்படவில்லை.

8 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.1,00,000/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு !

இந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா வெகு விமரிசையாக வருகிற 26.07.2022 அன்று கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, வருகிற 26-ந் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அறிவித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இது பொருந்தும்.

இருப்பினும் இந்த உள்ளூர் விடுமுறையானது தமிழ்நாடு அரசு பள்ளித்தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு (மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளித்தேர்வுகள் உள்பட) பொருந்தாது. மேலும் உள்ளூர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டும், குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு ஆகஸ்ட் மாதம் 6-ந் தேதி(சனிக்கிழமை) முழு வேலை நாள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!