தமிழகம் முழுவதும் மே 5ம் தேதி கடைகளுக்கு விடுமுறை – வணிகர் சங்கத்தினர் அறிவிப்பு!
வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா திருச்சியில் அளித்த பேட்டியில் திருச்சியில் மே 5ம் தேதி வணிகர் விடியல் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகர் மாநாடு
கடந்த 2 வருட காலமாக கொரோனா வைரஸ் காரணமாக எந்த வித கூட்டமும் மற்றும் மாநாடும் நடைபெறாமல் இருந்தது. முழு ஊரடங்கில் பிறப்பித்திருந்தது.மேலும் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கொரோனா தளர்வுகள் விடப்பட்டன. மேலும் எல்லா விதமான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தந்தனர்.அதனை தொடர்ந்து வணிகர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கும், உயர்த்துவதற்கும், தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் மாநாடு நடைபெறும் என்றும் அன்று அனைத்து வியாபாரிகளும் தங்களது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வியாபாரிகள் தங்களது குடும்பத்துடன் மாநாட்டில் பங்கேற்பதற்காக அழைப்பு விடுத்துள்ளதாக கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளத்திற்கு அனுமதி? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் 2 வருட காலமாக கொரோனா வைரஸ் காரணமாக ஏற்றுமதி இறக்குமதிகள் சிக்கல் ஏற்பட்டது.இதனை தொடர்ந்து பங்கு சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. அதனால் வணிகர் சங்கத்தின் தொழிலாளர்களுக்கு பண தட்டுப்பாடு ஏற்பட்டது.அதனை தொடர்ந்து மே 5ம் தேதி அன்றைய தினம் குமாரி முதல் குமரைப்பூண்டி வரை உள்ள கடைகள்,பெருநகரங்கள்,தொழிற்கூடங்கள் ,உணவகங்கள் ,மால்கள் ,நகை கடைகள் ,ஜவுளிக்கடைகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றும் வணிக ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக இந்த மாநாடு நடத்த படுகிறது. அதனால் அனைத்து மாவட்டங்களில் உள்ள வணிகர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொண்டார்.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளத்திற்கு அனுமதி? வலுக்கும் கோரிக்கை!
இது தொடர்பாக சென்னை பெரியமேட்டில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில பொறுப்பாளர் ஹர ஜி ஏ.எம் .சதக்கத்துல்லா அவர்கள் உணவு பொருள் சங்க தலைவர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் கலந்து கொண்டனர்.வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா அளித்த பேட்டியில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.