தமிழகத்தில் ஏப்ரல் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 29ம் தேதி அன்று அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறும் பண்டிகைகள் ஒரு சிறப்பு வாய்ந்த திருத்தல திருவிழாக்கள் போன்றவைகளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் மாதமான சித்திரையில் தமிழகத்தில் ஏராளமான முக்கிய திருத்தலங்களில் திருவிழாக்கள் கொண்டாட்டப்பட்டு வருகிறது. கடந்த 16ம் தேதி மதுரையில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு நடைபெற்ற அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் நிகழ்வன்று அம் மாவட்டத்திற்கு ஏப்ரல் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்து உள்ளவர்கள் கவனத்திற்கு – முழு விவரம் இதோ!
அதே போல தஞ்சாவூரில் அமைந்துள்ள பெரிய கோயிலில் தேரோட்ட நிகழ்வை முன்னிட்டு ஏப்ரல் 13ம் தேதி அம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது . அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா அன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. இத்திருத்தலம் திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளக்குகிறது.
காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவு ஆகிய அரங்கத்தில் இறைவன் கோவில் கொண்டுள்ளதால் “திருவரங்கம் என்று அழைக்கப்படும். இப்பகுதியை ஆண்ட “தர்ம வர்ம சோழன்” ரங்கத்தாருக்கு ஆலயம் கட்டியதாக வரலாறு கூறுகிறது. இத்திருத்தல திருவிழாவில் ஏப்ரல் 29ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.