தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்து உள்ளவர்கள் கவனத்திற்கு – முழு விவரம் இதோ!
தமிழகத்தில் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டால் அதை மீண்டும் எவ்வாறு ஆக்டிவ் செய்வது என்பதை இந்த தொகுப்பில் முழுமையாக பார்ப்போம்.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் ரேஷன் அட்டை தற்போது ஒரு வாழ்வாதாரமாக மாறி விட்டது. மேலும் ரேஷன் கடைகளில் வாங்கும் பொருட்களை வைத்து தான் சாமானிய மக்கள் தங்களின் குடும்பங்களை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழக அரசும் பல நன்மைகளை ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக தமிழகத்தை வாட்டி வதைத்த கொரோனா பரவலின் போது ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு ரூபாய் 2000 பணம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பொங்கல் பரிசும் வழங்கப்பட்டது. அடுத்தாக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்க இருப்பதாக தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டு உள்ளது.
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – ஆலோசனை நடத்தும் பிரதமர் மோடி!
இந்நிலையில் இந்த ரேஷன் அட்டைகளை பயன் படுத்துபவர்கள் ரேஷன் பொருட்களை மாதந்தோறும் வாங்க வேண்டும் என்று அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு சிலர் அந்த பொருட்களை வாங்காமல் இருந்து வருகின்றனர். அதனால் தமிழக அரசு இவ்வாறு தொடர்ந்து ஆறு மாதம் ரேஷன் பொருட்களை வாங்காமல் இருப்பவர்களுக்கு அவர்களின் ரேஷன் கார்டுகளை ரத்து செய்து வருகிறது. இவ்வாறு தங்களின் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு இருந்தால் அதை எவ்வாறு மீண்டும் ஆக்ட்டிவ் செய்யலாம் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
தற்போது உங்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டு இருந்தால், அதை மீண்டும் ஆக்டிவேட் செய்ய முதலில் மாநில அல்லது மத்திய அரசின் AePDS போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும். பின்பு கீழே குறிப்பிடப்படும் படிகளை பின்பற்றி ரேஷன் கார்டை மீண்டும் ஆக்டிவேட் செய்ய கோரிக்கை விடுவிக்க வேண்டும். அதனை அந்த அதிகாரிகள் ஏற்றுக் கொண்டால் ரத்து செய்யப்பட்ட ரேஷன் கார்டு மீண்டும் ஆக்டிவேட் செய்யப்படும். இல்லை என்றால், https://www.tnpds.gov.in/ போர்ட்டலில் இருக்கும் ‘Ration Card Correction’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்பு ரேஷன் கார்டு திருத்தம் பக்கத்தில் படிவத்தை நிரப்ப வேண்டும்.அடுத்து, உங்கள் ரேஷன் கார்டில் எவையேனும் பிழைகள் இருந்தால் அதை சரி செய்து கொள்ளலாம்.