ஜூன் 20ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசின் புதிய உத்தரவு!
மேகாலயா மாநிலத்தில் தற்போது பெய்து வரும் கனமழையை கருத்தில் கொண்டு வரும் ஜூன் 20ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
பள்ளி விடுமுறை
சமீப காலமாக இந்தியாவில் நிலவி வரும் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பல்வேறு மாநில அரசுகள் பள்ளிகளுக்கான விடுமுறைகளை முன்கூட்டியே அளித்து, இப்போது புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகளை மீண்டுமாக திறந்துள்ளது. இந்த சூழலில் மேகாலயா மாநிலத்தில் தற்போது பெய்து வரும் கனமழையை கருத்தில் கொண்டு வரும் ஜூன் 20ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பாக பி.டி.ஆர் திவாரி கூறுகையில் ‘இந்த அறிவிப்பு பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு நலனுக்காக வெளியிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது மேகாலயாவின் ஷில்லாங் மாவட்டத்தில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த ஐந்து நாட்களில் மேகாலயாவில் மிக கனமழையுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று கணித்துள்ளது. இந்த இடைவிடாத மழை மற்றும் வானிலை எச்சரிக்கையை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளும் ஜூன் 20 வரை மூடப்படும் என்று மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்திய ஓய்வுதாரர்கள் கவனத்திற்கு – புதிய வசதிகள் அறிமுகம்! மத்திய அரசு உத்தரவு!
இந்த விடுமுறை நாளைக்கு பிற்பாடு, மாவட்டங்கள் முழுவதும் உள்ள துணை ஆணையர்கள் ஒவ்வொரு பாதிப்பு அளவின் அடிப்படையில் மதிப்பீடு செய்து அந்தந்த மாவட்டங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில் மேகாலயா மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள லைட்லரேம் கிராமத்தில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பல குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.