தமிழக சுகாதாரத் துறையில் ரூ.20000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Assistant Research Officers & Lab Technician பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் தற்போது Assistant Research Officers & Lab Technician பணிகளுக்கு என்று மொத்தமாக 20 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Assistant Research Officers பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பிரிவிற்கு தகுந்த பாடப்பிரிவில் M.Sc / B.Pharm / M.Pharm / MBBS / UG போன்ற ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
- Assistant Research Officers பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பாக குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் நேரடியாக மதிப்பெண் அடிப்படையில் (Marks Based Selection) தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.