இந்திய ஓய்வுதாரர்கள் கவனத்திற்கு – புதிய வசதிகள் அறிமுகம்! மத்திய அரசு உத்தரவு!
ஓய்வூதியதாரர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு பென்ஷன் வழங்குவது குறித்த ஆலோசனைகள் வழங்கவும், அவர்களின் குறைகளை கேட்டு அறியவும் மத்திய அரசாங்கத்தால் பாவிஷ்யா என்னும் இணையதளத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய பென்ஷன் துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாவிஷ்யா இணையதளம்:
ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு அவ்வப்போது பல சிறப்பான சலுகைகளை வழங்கி வருகிறது. ஓய்வூதியதாரர்கள் எளிமையாக பென்ஷன் பணத்தை பெறுவதற்காகவே செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட புதிய இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட உள்ள பாவிஷ்யா என்னும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இணையதளத்திலிருந்து ஓய்வூதியதாரர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு தானாகவே அலர்ட் கொடுக்கும் என மத்திய பென்ஷன் துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
மேலும் இந்த இணையதளம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சங்கங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் எனவும், அவர்களின் குறைகளை கேட்டறியவும், ஆலோசனைகள் வழங்கவும், கருத்துகளை பகிரவும் இந்த இணையதளம் முக்கிய பங்கு வகிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பென்ஷன் செயலாக்கம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பென்ஷன் வழங்குவது டிஜிட்டல்மயமாக்குவற்காகத்தான் இந்த இணையதளம் அறிமுகப்படுத்த உள்ளதாக பென்ஷன் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தேர்வில்லாத தமிழக அரசு வேலை – உடனே விரையுங்கள்..!
மேலும், பணி ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு பென்ஷன் வழங்குவது குறித்தான சில ஆலோசனைகள் வழங்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். குடிமக்களுக்கான பென்சன் சென்றடைவதில் வங்கிகள் தரப்பில் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதுபோல இணையதளத்தில் பிரச்சினை எதுவும் ஏற்படாது எனவும், அது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் கூட தானாகவே பிரச்சனை சரி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் செயல்படுத்தப்படும் இந்த பாவிஷ்யா இணையதளம் ஓய்வூதியதாரர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மத்திய பென்ஷன் துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.