இன்று முதல் ஜூலை 26 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் மாவட்ட ஆட்சியர், மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இன்று முதல் தொடர்ந்து ஆறு நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளார். இந்த விடுமுறை கன்வர் யாத்திரைக்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு விடப்பட்டு உள்ளது.
ஆறு நாட்கள் விடுமுறை:
கன்வர் யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த யாத்திரையின் பொழுது யாத்ரீகர்கள் ஹரித்வார், கௌமுக் மற்றும் உத்தரகாண்டில் உள்ள கங்கோத்ரி மற்றும் பீகாரில் உள்ள சுல்தாங்கஞ்ச் போன்ற பகுதிகளுக்கு கங்கை நதியின் புனித நீரை எடுத்து செல்வது வழக்கம். பின்னர், இந்த நீரை வைத்து சிவபெருமானை வழிபடுகின்றனர். மேலும், கடந்த 2 ஆண்டுகளுமே கொரோனா பரவல் காரணமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த யாத்திரை நடைபெறவில்லை.
TN Job “FB Group” Join Now
ஏற்கனவே இந்த யாத்திரையின் போது வாள்கள், திரிசூலங்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது என உத்தரகாண்ட் மாநிலத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அதையும் மீறி இது போன்ற பொருட்களை கொண்டு வந்தால் எல்லையிலேயே அனைத்து பொருட்களும் கைப்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த யாத்திரை இந்த ஆண்டு நடைபெற இருப்பதால் 5 கோடிக்கும் அதிகமான யாத்ரீகர்கள் கன்வர் யாத்திரையில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஜூலை 26ம் தேதி அரசு அலுவலகங்கள் பள்ளிகள் & கல்லூரிகள் மூடல் – இதற்காக தான்!
இந்த நிலையில் கன்வர் யாத்திரை கடந்த ஜூலை 14-ஆம் தேதி இன்று தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 15 நாட்கள் இந்த யாத்திரை நடைபெற இருப்பதால் ஹரித்வார் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை வரும் இன்று (ஜூலை 20) முதல் ஜூலை 26ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து கன்வர் யாத்திரைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே இருப்பதால் யாத்திரை நடைபெறுவதற்கான சாலைகள் மூடப்பட சாத்தியக்கூறுகளும் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து ஹரித்வாரில் கன்வார் யாத்திரை செல்லும் புனிதப் பாதையில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டிருக்கும் என்று ஹரித்வார் டிஎம் வினய் சங்கர் பாண்டே தெரிவித்துள்ளார்.