தமிழகத்தில் ஜூலை 26ம் தேதி அரசு அலுவலகங்கள் பள்ளிகள் & கல்லூரிகள் மூடல் – இதற்காக தான்!

0
தமிழகத்தில் ஜூலை 26ம் தேதி அரசு அலுவலகங்கள் பள்ளிகள் & கல்லூரிகள் மூடல் - இதற்காக தான்!
தமிழகத்தில் ஜூலை 26ம் தேதி அரசு அலுவலகங்கள் பள்ளிகள் & கல்லூரிகள் மூடல் - இதற்காக தான்!
தமிழகத்தில் ஜூலை 26ம் தேதி அரசு அலுவலகங்கள் பள்ளிகள் & கல்லூரிகள் மூடல் – இதற்காக தான்!

தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோவிலின் ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு வரும் ஜூலை 26ம் தேதியன்று அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை

தமிழகத்தில் இந்த ஆண்டு கொரோனா பரவல் ஓய்ந்து வந்ததற்கு பிறகு அனைத்து மத வழிபாட்டு தளங்களும் திறக்கப்பட்ட நிலையில், விழாக்களை கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரைக்கும் மதுரை மீனாட்சியம்மன் கோவில், நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் ஆகிய நிகழ்வுகள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ள கங்கை கொண்ட சோழபுரத்தின் பிரகதீஸ்வரர் கோவிலில் ஆடி திருவாதிரை விழா கடைபிடிக்கப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதாவது, அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவானது சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை மூலமாக அரசு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு வரும் ஜூலை 26ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், ‘மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பிரகதீஸ்வரர் கோவிலில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணை தேர்வு ஹால் டிக்கெட் – இன்று வெளியீடு!

அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் இந்த விடுமுறை நாளில் மூடப்படும். ஆனால், இந்த உள்ளூர் விடுமுறையானது மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு பொருந்தாது. இப்போது, உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு ஆகஸ்டு மாதம் 6ம் தேதி சனிக்கிழமை முழு வேலை நாளாக செயல்படும். மேலும் உள்ளூர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்கள், மாவட்ட கருவூலங்கள் அனைத்தும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு செயல்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!