தமிழக மதுக்கடைகளுக்கு வாராந்திர விடுமுறை – அரசு பரிசீலனை!
தமிழகத்தில் மதுவிலக்கை வலியுறுத்தும் வகையிலான கருத்துக்கள் அதிக அளவில் பரவி வருகிறது. இந்த நிலையில் மதுக்கடைகளுக்கு வார விடுமுறை அளிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
வார விடுமுறை:
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டி பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது. இந்த நிலையில் மது கடைகளுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பது குறித்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக டாஸ்மார்க் பணியாளர் சங்க பொது செயலாளர், கேரளாவில் உள்ள மதுக்கடைகளில் மது விற்பனைக்கு ஒரு கவுண்டரும் பணம் பெறுவதற்கு ஒரு கவுண்டர் என தனித்தனியாக உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான சூப்பர் அறிவிப்பு – 12 பண்டிகை தின விடுமுறை கட்டாயம்!
இதனால் கடைகளில் கூட்டம் சேர்வதில்லை. அதே நேரம் அங்கு மது கடை ஊழியர்களுக்கு சுழற்சி அடிப்படையில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அம்மாநிலத்தில் மதுக்கடை ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான விடுப்பும் வழங்கப்படுகிறது. இதே போல தமிழகத்திலும் மது கடை ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும். இது ஊழியர்களின் பல ஆண்டு கோரிக்கையாக இருந்து வருகிறது. இவ்வாறு விடுமுறை அளிப்பதனால் ஒருநாள் குடிப்பதும் தவிர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.