தமிழகத்தில் நவ.16 வரை கனமழை நீடிக்கும் – எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் நவ.16 வரை கனமழை நீடிக்கும் - எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? வானிலை அறிக்கை!
தமிழகத்தில் நவ.16 வரை கனமழை நீடிக்கும் - எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? வானிலை அறிக்கை!
தமிழகத்தில் நவ.16 வரை கனமழை நீடிக்கும் – எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? வானிலை அறிக்கை!

தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் 4 நாட்களுக்கு பரவலாக பல பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வானிலை தகவல்‌:

வட உள்‌ தமிழக பகுதிகளில்‌ (3.6 கிலோ மீட்டர்‌ உயரம்‌ வரை) நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி காரணமாக,

14.11.2021: தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அனேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கன்னியாகுமரி மாவட்டத்தில்‌ ஒரு சில இடங்களில்‌ கன முதல்‌ மிக கன மழையும்‌, ஓரிரு இடங்களில்‌ அது கன மழையும்‌, நீலகிரி, திண்டுக்கல்‌, தேனி ,திருப்பூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, ஈரோடு, திருப்பத்தூர்‌, வேலூர்‌, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர்‌, விழுப்புரம்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, திருவள்ளூர்‌, கோயம்புத்தூர்‌, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

15.11.2021: தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அனேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, ஈரோடு, திருப்பத்தூர்‌, வேலூர்‌, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்‌, விழுப்புரம்‌, செங்கல்பட்டு, கோயம்புத்தூர்‌, சேலம்‌, தர்மபுரி, கடலூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

16.11.2021: தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அனேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கடலூர்‌, தஞ்சாவூர்‌, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களில்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

17.11.2021, 18.11.2021: தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அனேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வட கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Bank of India வங்கி வேலைவாய்ப்பு 2021 – ரூ.20,000/- ஊதியம் | இறுதி வாய்ப்பு..!

சென்னையை பொறுத்தவரை,

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல்‌ பகுதிகள்‌:

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய அந்தமான்‌ கடற்பகுதியில்‌ நிலவுகிறது. இதனால் 14.11.2021,15.11.2021: குமரிக்கடல்‌ மற்றும்‌ மன்னார்‌ வளைகுடா பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

14.11.2021,15.11.2021: தெற்கு அந்தமான்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

16.11.2021,17.11.2021: மத்திய வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

18.11.2021: மத்திய மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

14.11.2021, 15.11.2021: கேரளா மற்றும்‌ கர்நாடக கடலோரப்‌ பகுதிகள்‌, லட்சத்தீவு பகுதிகள்‌, தென்கிழக்கு மற்றும்‌ மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும் இடைஇடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

16.11.2021,17.11.2021: வட கர்நாடக கடலோரப்‌ பகுதிகள்‌, மகாராஷ்டிர கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!