விரிவுபடுத்தப்படும் குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை திட்டம்.. ரூ. 2000 வழங்கல் -அறிவிப்பை வெளியிட்ட கர்நாடகா!
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்க கர்நாடகா மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை:
தமிழகத்தில் ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று திமுக தலைமையிலான அரசு கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது. இந்த அறிவிப்பு தமிழக பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் இந்த உதவித்தொகை திட்டம் நடைமுறைக்கு வரும் என்று அரசு தெரிவித்துள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதே போல புதுவையில் அரசின் நலத்திட்டங்களை பெறாத மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தற்போது கர்நாடகாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரூ. 2000 வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மக்களே.. வரும் பட்ஜெட்டுக்கு முன்பாக இந்த பங்குகளில் முதலீடு செய்தால் லாபம் – வெளியான தகவல்!!
இது குறித்து அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர். அசோகா தகவல் வெளியிட்டுள்ளார். அதில் உதவித்தொகை குறித்து அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறும் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியினர் கர்நாடகா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு இது போல நல்ல திட்டங்களை அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு வர வேண்டு்ம்