தமிழக அரசு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைகளை விரைவில் வழங்கிட முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்துள்ளார். இதையடுத்து அரசு போக்குவரத்து பணியாளர்களின் கோரிக்கைகள் இறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
முக்கிய அறிவிப்பு:
தமிழக அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை, சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்துக்கழக பணிமனையில் கடந்த 12ம் தேதி நடந்தது. இந்த பேச்சுவார்த்தைவின் முடிவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசிய போது, தொழிற்சங்கங்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ரூ.300 பேட்டா வழங்கப்படும். இப்பணியாளர்களுக்கு வழங்கப்படும் 15 விதமான படிகளை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தயார்படுத்தும் பணிகள் தீவிரம்!
இதை தொடர்ந்து பேசிய அவர், போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் ரூ.1,000 வழங்கப்பட்டது. மேலும் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு சார்பில் முதல் கட்டமாக கடந்த 2019 செப்.1ம் தேதி முதல் 2 சதவீத உயர்வு, 2022 ஜன.1 முதல் 3 சதவீத உயர்வு என மொத்தமாக 5 சதவீத உயர்வு அளிக்கப்படும் என்று உறுதி அளித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சரின் அறிவுரையின் பேரில், மாநகர் போக்குவரத்துக் கழக, அயனாவரம் பணிமனையில், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று ஆய்வு செய்தார்கள். அதனைத் தொடர்ந்து, பெரம்பூர் மற்றும் அயனாவரம் பணிமனைகளில் பணிபுரியும் பணியாளர்களில் கடந்த மூன்று மாதங்களில் அதிக நாட்கள் பணிக்கு வராத, அதிக நாட்கள் விடுப்பு எடுத்த பணியாளர்களுடன் கலந்துரையாடினார்கள். இக்கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் பேசியது, போக்குவரத்து பணியாளர்களின் கோரிக்கைகள் ஊதிய ஒப்பந்தத்தில் இறுதி செய்யப்படும்.
Exams Daily Mobile App Download
மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பணிமனைகளுக்கும் நான் நேரில் சென்று, நீண்ட நாட்கள் பணிக்கு வராமல் இருக்கும் பணியாளர்களை சந்தித்து, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி பேருந்துகளை முழுமையாக இயக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். மேலும் போக்குவரத்து பணியாளர்கள் அடிக்கடி விடுமுறை எடுப்பது ஓய்வு பெறும் காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பேருந்துகளில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் பணியாளர்கள் பணியாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.