ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தயார்படுத்தும் பணிகள் தீவிரம்!
பள்ளி மாணவர்களுக்கு இன்னும் சில நாட்களில் அடுத்த கல்வியாண்டு துவங்க இருக்கிறது. இந்த சமயத்தில் கொரோனாவும் பரவி கொண்டிருக்கும் காரணத்தினால் பள்ளிகளை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
கொரோனா கட்டுப்பாடுகள்:
கொரோனா பரவலினால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுமே பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்ததால் பழையபடி பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் துவங்கப்பட்டன. இந்த கொரோனா பரவளின் காரணமாக இரண்டு ஆண்டுகளுமே பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக சரியாக பாடத்திட்டங்கள் நடத்தபடவில்லை.
திருப்பதியில் ஜூன் மாதம் 16, 17ம் தேதிகளில் ஏலம் – தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்!
இதனால் மாணவர்களின் கல்வித்திறன் மிகவும் பாதிப்படைந்துள்ளது. மாணவர்களின் கல்வித்திறன் பாதிப்படைந்துள்ளதால் பல மாநிலங்களில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு நடுவே மீண்டும் கொரோனா பரவி கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் சில மாவட்டங்களில் கொரோனா பரவலின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இன்னும் சில நாட்களில் பள்ளிகளும் திறக்க இருப்பதால் பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது, நோய் எதுவும் அண்டாத வகையில் வகுப்பறைகளை நன்கு காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும் எனவும், மாணவர்கள் அதிகமாக தொடும் இடங்களான குழாய்கள் மற்றும் கதவு கைப்பிடிகள் ஆகியவற்றை அவ்வப்போது சுத்தப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 12 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொரோனா தடுப்பூசி போடும்படியும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.