திருப்பதியில் ஜூன் மாதம் 16, 17ம் தேதிகளில் ஏலம் – தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் திருப்பதியில் வருகிற 16, 17ம் தேதிகளில் ஏலம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு
ஆந்திர மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிநாடுகளிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் வருகை புரிவார்கள். அதனால் கொரோனா கால கட்டத்தில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
Axis Bank வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சேவை கட்டணத்தில் மாற்றம்!
அதன்படி தற்போது பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் தங்களின் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். அதன்படி ஒரு நாள் உண்டியல் பல கோடிக்கணக்கில் வசூலாகும்.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து கோவிலுக்கு வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோவில் உண்டியலில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா நாடுகளில் உள்ள வெளிநாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நாணயங்களை தற்போது மின்னணு முறையில் ஜூன் 16, 17ம் தேதிகளில் ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பெற 08772264429 என்ற எண்ணிற்கோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.