மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – ஊதிய உயர்விற்கான புதிய சூத்திரம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா கால கட்டத்தில் தான் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டது. தற்போது மேலும் 3% அதிகரிக்கப்பட்டு 34% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊதிய உயர்வினை வழங்க புதிய சூத்திரமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு:
மத்திய அரசு ஊழியர்கள் பல நாட்களாகவே அகவிலைப்படி ஊதிய உயர்வு கிடைக்குமா என எதிர்பார்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில், அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 3% உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி சம்பள உயர்வு அளிக்கப்பட்டாலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவை தொகை வழங்கப்படாமலேயே இருந்தன. இதன்படி அரசு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய 18 மாதத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்துவது குறித்து, அரசுக்கும் அரசு ஊழியர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
நகரம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – போராட்டம் எதிரொலி! அரசு அதிரடி நடவடிக்கை!
8வது ஊதியக் குழுவில் சம்பளத்தை உயர்த்துவதற்காக புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். 18 மாதத்திற்கான நிலுவைத் தொகையை பெறாதவர்கள் கூட இந்த புதிய சூத்திரத்தின் மூலமாக பயன் பெற முடியும். மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படும். எப்போதும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்கும்.
தேர்வு இல்லாத CSIR மெட்ராஸ் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
புதிய சூத்திரத்தின் மூலமாக அரசு ஊழியர்களின் சம்பளம், பணவீக்கம், வாழ்க்கைச் செலவு மற்றும் பணியாளரின் செயல்திறன் ஆகிய அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சமமான பலன்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 8வது ஊதியக் குழுவில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படவுள்ளன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.