குஜராத் மாநில முதல்வர் விஜய் ராம்னிக்லால் ரூபானி – இன்று திடீர் ராஜினாமா!
தற்போது குஜராத் மாநில முதலமைச்சர் பதவியை வகித்து வந்த விஜய் ராம்னிக்லால் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
ராஜினாமா கடிதம்
பாஜக கட்சியை சேர்ந்த அமைச்சர் விஜய் ரூபானி கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது குஜராத் மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அம்மாநில முதல்வராக தொடர்ந்து 4 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த அவர் தனது பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார். பாஜக கட்சியை சேர்ந்த இவர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
தமிழக அரசு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் புதுப்பிப்பு – நவம்பர் 14 வரை கால அவகாசம்!
ஆனால் எதிர்பாராத விதமாக இன்று (செப்டம்பர் 11) முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதையடுத்து குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கியுள்ளார். தற்போது 65 வயதாகி இருக்கும் ரூபானியின் திடீர் ராஜினாமாவுக்கு என்ன காரணம் என்று உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. என்றாலும் அவரது விலகல் குஜராத் மாநில பாஜக கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு அலுவலகங்களில் சேவைகள் தாமதமானால் அபராதம், பணிநீக்கம் – மாநில அரசு அதிரடி!
இதற்கிடையில் சமீபத்திய நாட்களில் பாஜக கட்சியை விட்டு பதவி விலகும் நான்காவது முதல்வராக ரூபானி இருப்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்னதாக கடந்த ஜூலை மாதத்தில் கர்நாடகா முதல்வர் பிஎஸ் எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். தொடர்ந்து உத்தரகண்ட் மாநிலத்தில் திரிவேந்திர ராவத் மற்றும் தீரத் சிங் ராவத் என இரு முதல்வர்கள் 4 மாத இடைவெளியில் பதவி விலகியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.