இந்தியாவில் குரங்கு அம்மை நோய் தடுப்பு வழிகாட்டுதல்கள் – மத்திய அரசு வெளியீடு!
உலக நாடுகளில் பரவி வந்த குரங்கு அம்மை நோய்த் தொற்று தற்போது இந்தியாவிலும் பல மாநிலங்களில் பரவி வருகிறது. அந்த வகையில் குரங்கு அம்மை நோய்த் தொற்று குறித்த புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
குரங்கு அம்மை:
சர்வதேச நாடுகளை கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து வரும் நிலையில், அதில் இருந்து மீண்டு வரும் இந்த நேரத்தில் குரங்கு அம்மை நோய்த் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. உலகை அச்சுறுத்தி வருகிற குரங்கு அம்மை தற்போது 75 நாடுகளில் பரவி இருக்கிறது. இந்நிலையில் இந்த பாதிப்பானது தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கி இருக்கிறது. முதன்முறையாக வெளிநாட்டில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் டெல்லியிலும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது வரை நாடு முழுவதும் 8 பேருக்கு குரங்கு அம்மை நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் குரங்கு அம்மை நோயை தடுக்க செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன் படி நோய்த் தொற்றானது ஏற்கனவே குரங்கம்மை பாதித்தவருடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
நாட்டில் டீசல் & விமான எரிபொருள் ஏற்றுமதி வரி மீண்டும் குறைவு? மத்திய அரசு விளக்கம்!
தடுக்கும் முறைகள் :
- குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளி மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்
- சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது சானிடைசர் உபயோகித்து கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
- குரங்கு அம்மை நோய் பாதித்த நோயாளிகளின் அருகில் இருக்கும் போது, முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
- சுற்றுச்சூழல் சுகாதாரத்திற்காக கிருமிநாசினியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
- குரங்கு அம்மை நோயாளிகள் பயன்படுத்திய துணிகள், படுக்கைகள், துண்டுகளை பிறர் பகிர்ந்து கொள்ள கூடாது.
- குரங்கு அம்மை நோயாளிகளின் துணிகளை துவைக்க வேண்டாம்.
- குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டால் பொது நிகழ்வுகளில் பங்கேற்க கூடாது.
- குரங்கு அம்மை நோய் குறித்த தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.
- குரங்கு அம்மை தொற்றுக்கு உள்ளானவர்களிடம் பாகுபாடு காட்டக் கூடாது.