நாட்டில் டீசல் & விமான எரிபொருள் ஏற்றுமதி வரி மீண்டும் குறைவு? மத்திய அரசு விளக்கம்!
இந்தியாவில் பணவீக்கம் நிலவி வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. மேலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளுக்கு வரி விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஏற்றுமதி வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது.
ஏற்றுமதி வரிக்குறைப்பு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக பல்வேறு நாடுகளில் கச்சா எண்ணெய்க்கும் இயற்கை எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட சில பகுதிகளில் பெட்ரோல், டீசலுக்குத் தட்டுப்பாடு காணப்பட்டது. இந்த நிலையிலும் தனியார் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளை வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்து வந்தனர். அதனால் இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இதில் குறிப்பாக தற்போது பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீது பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி ஏற்றுமதி செய்யும் எரிபொருள் அளவிற்கு 50% உள்நாட்டில் விநியோகிக்க வேண்டும் என்று பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதேபோல் டீசல், இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு 30% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை உள்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 15 முதல் Jio 5G சேவை? ஆகாஷ் அம்பானி அறிக்கை
அத்துடன் புதிய வரிகள் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் மறு ஆய்வு செய்யப்படும். அதன்படி தற்போது டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அதாவது, ஏற்றுமதி டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ.11லிருந்து ரூ.5 ஆக அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதே போல் ஏற்றுமதி செய்யப்படும் விமான எரிபொருள் மீது லிட்டருக்கு ரூ.4 வீதம் விதிக்கப்பட்டு இருந்தது. இதனை தற்போது முழுவதுமாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை இன்று முதல் அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.