ஆகஸ்ட் 15 முதல் Jio 5G சேவை? ஆகாஷ் அம்பானி அறிக்கை!

0
ஆகஸ்ட் 15 முதல் Jio 5G சேவை? ஆகாஷ் அம்பானி அறிக்கை!
ஆகஸ்ட் 15 முதல் Jio 5G சேவை? ஆகாஷ் அம்பானி அறிக்கை!
ஆகஸ்ட் 15 முதல் Jio 5G சேவை? ஆகாஷ் அம்பானி அறிக்கை!

நாட்டின் நம்பர் ஒன் டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ மிக விரைவில் 5ஜியை அறிமுகப்படுத்தலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரிலையன்ஸ் ஜியோ-வால் TRUE 5G சேவை மட்டும் அல்லாமல் ஆப்டிக் ஃபைபர் வாயிலாகவும் இந்தியாவில் 5ஜி சேவை அளிக்க முடியும் எனத் ரிலையன்ஸ் ஜியோ-வின் புதிய தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

Jio 5G சேவை:

இந்தியாவின் முதல் 5 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் கடந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. நேற்றுடன் ஏலம் முடிவடைந்துள்ளது. 7 நாட்கள் நடைபெற்ற ஏலத்தின் முடிவில் 1,50,173 கோடி ரூபாய்க்கு 5ஜி அலைக்கற்றைக்கான உரிமம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம் அதிக ஸ்பெக்ட்ரம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exams Daily Mobile App Download

ஏலத்தில் சுமார் 88,078 கோடி ரூபாய்க்கு ஜியோ நிறுவனம் 5 ஜி ஸ்பெக்ட்ரம் வாங்கியுள்ளது.மேலும் ரிலையன்ஸ் ஜியோ-வை தொடர்ந்து சுனில் மிட்டல்-ன் பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.43,084 கோடி மதிப்பிலான அலைக்கற்றையை பல்வேறு பேண்டுகளில் கீழ் சுமார் 19,867 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைக் கைப்பற்றி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தை ஒப்பிடுகையில் ரிலையன்ஸ் ஜியோ இரண்டு மடங்கு அதிகத் தொகையை முதலீடு செய்து அலைக்கற்றைக் கைப்பற்றியுள்ளது. இந்த ஏலத்தில் ஜியோ யாரும் எதிர்பார்க்காத வகையில் 700MHz, 800MHz, 1800MHz, 3300MHz மற்றும் 26GHz பிரிவில் அலைக்கற்றைக் கைப்பற்றியுள்ளது.

கல்லூரியிலிருந்து மாணவர் விலகினால் முழு கட்டணம்? UGC புதிய உத்தரவு

மேலும் ஜியோ நிறுவனம் மிக விரைவில் 5ஜி சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர நாளன்று ஜியோவின் 5ஜி சேவை தொடங்கப்படலாம் என ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி சிறிய ஹின்ட் கொடுத்துள்ளார். இது குறித்து ஆகாஷ் அம்பானி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்தியாவின் 5ஜி பயணத்திற்கு ரிலையன்ஸ் ஜியோ தலைமை வகிக்கும் எனவும், வரும் சுதந்திர தினத்தை நாடு முழுவதும் 5ஜி சேவை தொடக்கத்துடன் நாம் கொண்டாடுவோம் எனவும் தெரிவித்துள்ளார். எனவே, வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்ட நாளன்று ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தும் என தகவல்கள் கூறுகின்றன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!