கல்லூரியிலிருந்து மாணவர் விலகினால் முழு கட்டணம்? UGC புதிய உத்தரவு!
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்கள் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் வேறு கல்லூரிக்கு மாறினால் அந்த கல்லூரி நிர்வாகம் மாணவர் செலுத்திய முழு கல்வி கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் என UGC அறிவித்துள்ளது.
UGC முக்கிய அறிவிப்பு:
நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான CUET தேர்வு வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் நிறைவடைகிறது. இந்தாண்டு CUET தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும் என யுஜிசி தலைவர் அறிவித்திருந்தார். மேலும், இதற்கான தேர்வு முடிவுகள் தேர்வு நிறைவடைந்து 15 நாட்களுக்குள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வு முடிவுகளும் இன்னும் வெளியாமல் இருக்கின்றன.
Exams Daily Mobile App Download
இதனால், மாணவர்கள் தற்போதைக்கு வேறு கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் சேர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி போன்ற காரணங்களால் பாதியிலேயே வேறு கல்லூரிக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். இந்நிலையில், மாணவர்கள் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் வேறு கல்லூரிக்கு மாற விரும்பினால் அந்த கல்லூரி நிர்வாகம் மாணவர் செலுத்திய முழு கல்வி கட்டணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும் என அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (ஆக. 4) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு
மேலும், மாணவரின் சேர்க்கையை ரத்து செய்வதற்கென்றே கல்லூரி நிர்வாகம் தனியாக எந்த தொகையையும் கட்டணமாக வசூலிக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அக்டோபர் 2022 ஆம் தேதி வரைக்கும் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் எனவும் யுஜிசி தெரிவித்துள்ளது. பெற்றோர்களின் நிதிச்சுமையை கருத்தில் கொண்டே நாட்டில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக யுஜிசி தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.