தமிழக பேராசிரியர்களுக்கு பணியிட மாற்ற கலந்தாய்வு – வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் பணியிட மாற்றம் கடந்த 4 வருடங்களாக நடத்தப்படவில்லை. அதனால் இந்தாண்டு தமிழக கல்லூரி பேராசிரியர்கள் பணியிட மாற்றம் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பணியிட மாறுதல்:
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக நிலவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகளில் நேரடி வகுப்புக்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் தினசரி வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வந்தது. அதனால் இந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2022 – 2023 ம் கல்வியாண்டில் கொரோனா தாக்கம் குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது வகுப்புகள் நேரடியாக நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் தற்காலிக பேராசிரியர்களுக்கு பணி காலமானது மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
ஊதியம் மற்றும் பிற படிகள் வழங்குவதற்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் கல்லூரி பேராசிரியர்களுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு முதல் 4 வருடங்களாக பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெறவில்லை. அதனால் பேராசிரியர்கள் குடும்பத்தை பிரிந்து வெளியூர்களில் பணியாற்றுகின்றனர். மேலும் நிர்வாக காரணங்களால் சில பேராசிரியர்கள் திடீரென பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.
இந்தியாவில் குரங்கு அம்மை நோய் தடுப்பு வழிகாட்டுதல்கள் – மத்திய அரசு வெளியீடு
இதனால் தகுதியானவர்களுக்கு இடமாறுதல் கிடைப்பதில்லை. இந்த நிலையில் நடப்பாண்டு அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் மூலம் தகுதியும், தேவையும் உள்ள கல்லூரி பேராசிரியர்களுக்கு நியாயமான முறையில் பணியிட மாறுதல் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.