Post Office மாதம் ரூ.1515 சேமித்தால் ரூ.34 லட்சம் வரை ரிட்டன்ஸ் – கிராம் சுரக்ஷா திட்டம்!
அஞ்சல் நிலையத்தின் கிராம் சுரக்ஷா திட்டத்தில் குறைவான முதலீட்டில் அதிக முதிர்வுத் தொகையை பெறலாம். இத்திட்டத்தை யார் யார் தொடங்கலாம் மற்றும் எப்படி சேமிக்கலாம் என்பதை பார்ப்போம்.
கிராம சுரக்ஷா திட்டம்:
மத்திய அரசின் தபால் நிலைய சிறு சேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு இணையாக அதிக வட்டி தொகையை கொடுக்கிறது. இந்த வகையில் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் மக்கள் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர். இத்திட்டங்கள் குறைவான ரிஸ்க் மற்றும் அதிக பாதுகாப்பு அளிக்க கூடியவையாக உள்ளன. இந்த வகையில் கிராம் சுரக்ஷா திட்டம் அதிக முதிர்வு தொகையை அளிக்கிறது. இத்திட்டத்தை 19 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் தொடங்கலாம்.
பிப்ரவரி 1 முதல் இரவு ஊரடங்கு ரத்து, புதிய தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!
இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வரை சேமிக்கலாம். இதற்கான பிரீமியம் தொகையை மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர முறையில் தேர்ந்தெடுத்து செலுத்தலாம். இந்த வகையில் பாலிசிதாரரால் பிரீமியம் இடையில் கட்ட முடியவில்லை என்றால் நிலுவை தொகையை கட்டி பாலிசியை புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் மாதம் ரூ.1515 பிரீமியம் தொகையை 55 ஆண்டுகளுக்கு சேமித்து வந்தால் வட்டியுடன் சேர்த்து ரூ.34.60 லட்சம் வரை ரிட்டன்ஸ் கிடைக்கும்.
தமிழகத்தில் கல்லூரி, பல்கலை பேராசிரியர்களுக்கு ஜாக்பாட் – அறிவிக்குமா அரசு?
இந்த வகையில் பாலிசி வாங்கிய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடன் பெறும் வசதி மற்றும் பாலிசிதாரர் பாலிசியை 3 ஆண்டுகளுக்குப் பிறகு சரண்டர் செய்யும் வசதியும் உள்ளது. இந்த சிறப்பு சலுகைகளே இத்திட்டத்தின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. மேலும் பாலிசியின் மிகப்பெரிய சலுகையாக போஸ்ட் ஆபீஸ் வழங்கும் போனஸ் தொகை ஆண்டுக்கு 1,000 ரூபாய்க்கு ரூ.65 என போனஸ் ஆகும். பாலிசிதாரருக்கு, போனஸுடன் உறுதிசெய்யப்பட்ட தொகையானது 80 வயதை எட்டும் போது வழங்கப்படும் அல்லது மரணம் ஏற்பட்டால் நாமினிக்கு வழங்கப்படும்.