பிப்ரவரி 1 முதல் இரவு ஊரடங்கு ரத்து, புதிய தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய் தொற்று பாதிப்புகளை கருத்தில் கொண்டு தற்போது அமலில் இருந்து வரும் இரவு நேர ஊரடங்கு உத்தரவை பிப்ரவரி 1 முதல் தளர்த்துவதாக அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
ஊரடங்கு தளர்வு
இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸின் 3ம் அலைத்தாக்கம் பரவ ஆரம்பித்து தற்போது இந்த நோய் தொற்றானது சமூக பரவலாக மாறி இருக்கிறது. இந்த நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்கள் தோறும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி முடக்கம் போன்றவை மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வழக்குகள் அதிகரித்து வரும் சூழலில் இந்த நோயின் தாக்கம் என்பது முந்தைய அலைகளுடன் ஒப்பிடுகையில் குறைவு தான். அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கதாக வகையில் இது போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ICC 2021 ஐசிசி சிறந்த பேட்டராக இந்திய வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா தேர்வு – ரசிகர்கள் உற்சாகம்!
இதற்கு மத்தியில் அசாம் மாநிலத்தில் தினசரி இரவு 10 மணி முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் முழு ஊரடங்கு இனி தளர்த்தப்படும் என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். அதாவது அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள ஜனதா பவனில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ‘வணிக நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளின் கடுமையான தாக்கங்களைக் கருத்தில் கொண்டு இரவு ஊரடங்குச் சட்டம் இனி இரவு 10 மணியில் இருந்து இரவு 11 மணி வரை தளர்த்தப்படும்.
மேலும் மாநிலம் முழுவதும் பள்ளிகள் படிப்படியாக மீண்டும் திறக்கப்படும். இருப்பினும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 7 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கை அமலில் இருக்கும். மாநிலத்தில் குறைந்த எண்ணிக்கையிலான புதிய கொரோனா வழக்குகள் காணப்படுவதாலும், இறப்புகள் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் குறைந்தபட்சமாக பதிவு செய்யப்பட்டிருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கல்லூரி, பல்கலை பேராசிரியர்களுக்கு ஜாக்பாட் – அறிவிக்குமா அரசு?
இதற்கிடையில் அசாமில் கொரோனா வழக்குகள் சரிவைக் காணும்போது, மாநிலத்தில் ஒமிக்ரான் தொடர்பான இறப்புகள் எதுவும் இல்லை என்பதால், பிப்ரவரி 1 முதல் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு இரவு 11 மணி முதல் இருக்கும் என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் தொற்று அதிகரிக்கும் இடங்களில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 2,277 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளது கவனிக்கத்தக்கது.