தமிழகத்தில் கல்லூரி, பல்கலை பேராசிரியர்களுக்கு ஜாக்பாட் – அறிவிக்குமா அரசு?

0
தமிழகத்தில் கல்லூரி, பல்கலை பேராசிரியர்களுக்கு ஜாக்பாட் - அறிவிக்குமா அரசு?
தமிழகத்தில் கல்லூரி, பல்கலை பேராசிரியர்களுக்கு ஜாக்பாட் - அறிவிக்குமா அரசு?
தமிழகத்தில் கல்லூரி, பல்கலை பேராசிரியர்களுக்கு ஜாக்பாட் – அறிவிக்குமா அரசு?

தமிழகத்தில் அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு விரைவாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது குறித்தும் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

பதவி உயர்வு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு 2 வருடங்களுக்கு மேலாக விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் கல்வித்துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளும், போட்டித்தேர்வுகளும் நடைபெறவில்லை. இந்த நிலையில் கடந்த 2021 செப்டம்பர் மாதம் கொரோனா இரண்டாம் அலை குறைந்ததை அடுத்து பள்ளி,கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வை அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,334 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கான தேர்வு குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

பணியாளர்களுக்கு 2022 வருடத்திற்கான தொடர் விடுமுறை நாட்கள் – முழு விபரங்கள் இதோ!

இந்த நிலையில் அரசு கல்லூரி, பல்கலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வை விரைந்து வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பணியாற்றி வரும் பேராசிரியர்களுக்கு 5 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று கூறினார். கடந்த 3 முதல் 5 ஆண்டுகளாக பதவி உயர்வு மறுக்கப்படுவதால் அவர்கள் மனதளவிலும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுவது அவர்களின் பணி நிலையையும், ஊதியத்தையும், பணி ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியத்தையும் கடுமையாக பாதிக்கும்.

மாநிலம் முழுவதும் பள்ளிகள் 33% திறனுடன் மீண்டும் திறப்பு? அரசு முடிவு!

தற்போது தமிழக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் போதிய அளவில் பணி நியமனங்கள் நடக்காததால் பணியில் சேர அதிக வயதாகி விடுகிறது. பதவி உயர்வு கிடைக்காததால் மனச்சோர்வும், மன உளைச்சலுக்கு ஆளாகும் ஆசிரியர்கள், விரக்தியில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்துவதில்லை. அதனால் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அவர்களின் பணி நிறைவு ஆண்டின் அடிப்படையில் பதவி உயர்வை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!