BECIL நிறுவனத்தில் ரூ.24,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – 500 காலிப்பணியிடங்கள்
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள புலனாய்வாளர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 500 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களையும் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் விண்ணப்பதார்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
BECIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
இன்ஜினியரிங் கன்சல்டன்ட் காலிப்பணியிடங்கள் :
Investigator – 350 காலிப்பணியிடங்கள்
Supervisors – 150 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 500 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
BECIL கல்வி தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் நல்ல வேலை அறிவு பெற்றிருக்க வேண்டும்.
இன்ஜினியரிங் கன்சல்டன்ட் வயது வரம்பு :
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்களின் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
BECIL சம்பள விவரங்கள் :
Investigator பணிக்கு ரூ.24,000/- மற்றும் Supervisors பணிக்கு ரூ.30,000/- என மாத ஊதியம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இன்ஜினியரிங் கன்சல்டன்ட் தேர்வு செயல்முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இன்ஜினியரிங் கன்சல்டன்ட் விண்ணப்ப கட்டணம் :
General / OBC / Ex-Serviceman விண்ணப்பதாரர் ரூ.500/- மற்றும் SC / ST / EWS / PH விண்ணப்பதாரர் ரூ.350/- என விண்ணப்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை சரியாக பூர்த்தி செய்து 25.01.2022 க்குள் கீழ் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இப்பணிக்காக கால அவகாசம் நாளையுடன் நிறைவு பெறுவதால் இப்பணிக்கு தகுதியானவர்கள் உடனே இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையவும்.