சென்னையில் 30 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர் – ஆணையர் அறிவிப்பு!!

0
சென்னையில் 30 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர் - ஆணையர் அறிவிப்பு!!
சென்னையில் 30 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர் - ஆணையர் அறிவிப்பு!!
சென்னையில் 30 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர் – ஆணையர் அறிவிப்பு!!

தமிழக சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சென்னையில் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 7 ஆயிரம் ரயில்வே பணியாளர்களுக்கு முகாம் மூலம் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல்:

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. சட்டமன்ற தேர்தல் பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. தேர்தல் பணிகளில் அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆசிரியர்கள், ரயில்வே துறை ஊழியர்கள் போன்றவர்களின் பட்டியல் முன்னதாகவே தயாரிக்கப்பட்டு விட்டது.

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தேர்தல் அலுவலர்:

சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் அவர்கள், தமிழக சட்டமன்ற தேர்தலில் ஈடுபட உள்ள ரயில்வே பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை சென்னை ஐ.சி.எப் மருத்துவமனையில் இன்று தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம், தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டு உள்ள ரயில்வே ஊழியர்கள் சுமார் 7,000 பேருக்கு இன்று முதல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. கடந்த தேர்தலில் 1,200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்று அமைக்கப்பட்டிருந்தது.

TN Job “FB  Group” Join Now

தற்போது, கொரோனா காரணமாக 1,050 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. இதற்காக 6,000க்கும் அதிகமாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு தேர்தல் பணிகளில் சென்னையில் மட்டும் 16 தொகுதிகளுக்கும் சேர்த்து 30,000 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று கூறினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!